Sunday, March 31, 2013

ஒற்றைத் தலைவலி நீங்க சிறந்த மருந்து

அகன்ற சிறகாக உடைந்த இலைகளை உடையது சுண்டை. வெள்ளை நிறமான பூங்கொத்துக்களையும், கொத்து கொத்தான உருண்டை வடிவமான காய்களையும் உடைய முள்ளுள்ள சிறு செடி இனம். காய் சற்று கசப்புச் சுவை உடையது. காய் வற்றலாகக் கடைகளில் கிடைக்கும். காயே மருத்துவக் குணம் உடையது. வீட்டுத் தோட்டங்களிலும் வளர்ப்பதுண்டு. மலைக் காடுகளிலும் இது தானாகவே வளர்வதுண்டு. இந்த வகை சுண்டையை மலைச் சுண்டை என்பார்கள். கோழையை அகற்றவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் மருத்துவக் குணம் உடையது. 

மருத்துவக் குணங்கள்:
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.
சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள். மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.
சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.
சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.

சிறுநீரகக் கல்லுக்கு சூப்பரான தீர்வு...


முஸ்கி :  நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்லஎனது அனுவத்தில் நான் மேற்கொண்டபலனைத்தந்தவீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

          இன்றய உணவுப்பழக்கத்தினால்சிறுநீரககல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டதுஇதனால் உண்டாகும் வலியானதுஎனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாததுஅந்தளவுக்கு வலி பின்னி பெடலெடுத்துவிடும். இரண்டு நாட்கள் முன்சக பதிவர் ” தோழி” என்பவரின் பதிவு  படித்தேன்அதை படித்ததிலிருந்துநான் எனக்கு ஏற்பட்ட சிறுநீரகக்கல் பிரச்சினையை எப்படி `10 ரூபாய்  செலவில் தீர்வு கண்டேன் என்பதை நாலு பேருக்கு தெரிவிக்கலாம் என்பதே இந்த பதிவின்  நோக்கம்.

        எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன்ஆனால் வலியின் அளவு கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்ததுமருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும்இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார்சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால்இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால்அதற்கு உத்திரவாதம் இல்லைஉங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும் அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

        சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன்இத்தனைக்கும்என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன்இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

        வீடு வந்து கூகுளம்மாவிடம் பிரச்சினையை சொல்லி தீர்வு கேட்டேன்அதில் பலபேர் பல ஆலோசனைகளை இலவசமாகவும்சில பேர் பணம் அனுப்ப சொல்லியும் கேட்டிருந்தார்கள்அதில் ஒரு இணையத்தில்ஒருவர்ஒரு பச்சைக் காய்கறி+வழக்கமாக நாம் உபயோகப்படுத்தும் ஒரு திரவம்,சேர்த்துக் கொண்டால் சிறுநீரகக்கல் உடைந்துநாம் சிருநீர் போகும்போது வெளிவந்துவிடும் என்றும்அதற்கு கட்டணமாக $30-ஐ ஆன்லைனில் கட்டச் சொல்லியிருந்தார்வலியின் கொடுமையில், $30-ஐ கொடுக்கலாம் என்றால்ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் எனக்கு உடன்பாடு இல்லைஎனவே மறுபடியும் கூகுளம்மாவிடம் சரண்டர்ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகுமேலே சொன்ன $30-கட்டி சிகிச்சை பெற்ற ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்(ரொம்ப நல்லவர் போலும்).

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) திரவத்தின் பெயர் தண்ணீர்
(அட வீட்ல நாம தினமும் குடிக்கிறதுதான்  ) .

http://www.sailusfood.com/wp-content/uploads/2008/09/french-beans.jpg

இனி நான் மேற்கொண்ட சிகிச்சைஅந்த இணையதலத்தில் சொன்னது போல்):


¼ கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ்எல்லா கடைகளிலும் கிடைக்கிறது) `10-க்கு வாங்கிவிதை நீக்கிதண்ணீரில் கொதிக்க வைத்து (குறந்தது மணிநேரம்),
மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரைஒரே முறையில்  குடிக்க முடியவில்லையென்றால் சிறிது நேரம் விட்டு விட்டுகுடிக்க வேண்டும்இன்னும் அதிகமாக குடிக்க முடிந்தால் நலம்.

       நான் இதை குடித்தவுடன் (மாலை மணிக்கு ) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன்வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

     கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர் பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும்அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளிவருகிறவரைசிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டுசிறுநீர் வரும்.....ஆனால் வராது...... என்ற கதையாகிவிடும்,பயந்துவிடாமல்ாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும் சிறுநீர் பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்அப்போதுநாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் வெளியே வந்துவிடும்கற்கள் ஒரு ஸேப் இல்லாமல் இருப்பதால்உள்பாதையில் கிழித்து ரத்தமும் வரலாம்,ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது. எப்பூடி..? கூகுல் அம்மா ... வாழ்க.. வாழ்க... 
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன்எனக்கு கல் பிரச்சினை போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

நீங்களும் தாராளமாக முயற்சி செய்து பாருங்கள்மருத்துவச் செலவு இருவதாயிரத்திலிருந்து முப்பதாயிரம் வரை  சேமிக்கலாம்,.... ( வடை  போச்சே.... ) மேலும் இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ள்லாம்தினமும் லிட்டெர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

    சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையத்தில் அலைந்தபோது படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால்கல் உடைந்து  விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நாட்கள்  என்பது மிக அதிகமான காலம் அதனால்இதை நாம் கல் உருவாவதை தடுக்கும் முன் எச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதி உள்ளநீரும்பொடாசியம் உப்பும்கல்  உருவாவதை தடுக்குமாம்மேலும் இந்த பழத்தில் உள்ள  ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினைக்கு  நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம்  பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப்  பிழிந்துஒரு டேபிள்  ஸ்பூன் அளவு எடுத்துஅதனுடன் ஸ்பூன் கொள்ளு சாறுடன்  குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தைநீரில் கொதிக்க வைத்து வடிகட்டிஒரு மாதம் தொடர்ந்துகாலையில் காலி வயிறில்பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம்பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம்அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொள்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம். .

வாழைத் தண்டு ஜூஸ் வாழத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை மற்றும்  கல் உருவானதை உடைக்கும்(diffuse) திறன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு தினமும் லிட்டரிலிருந்து லிட்டர் வரை இல்லையெனில் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.


டிஸ்கி 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொறுக்க முடியாதவர்கள் டாக்டரிடம்  சென்றுவிடுவதே நல்லது.

டிஸ்கி 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால்தைரியமாக பின்பற்றலாம்இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.

டிஸ்கி 3 : இந்த ஆலோசனை இலவசம் தான்யாரும் இதற்காக எனக்கு பணம்!!! அனுப்ப வேண்டாமென்று கூவிக்கொள்கிறேன்....
எவன்டா இந்த டிஸ்கியை கண்டு பிடிச்சான்.. ங்கொய்யாலே  .. 

(நன்றி : http ://pattikattan .blogspot .com )